முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு
திருச்சி பஞ்சப்பூரில் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, 128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் 408.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்துள்ளார். ஒவ்வோர் ஊருக்கும், மாநகரங்களுக்கும் என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து, வருங்காலத்திற்கும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வளர்ச்சி நோக்கிய அரசாக திராவிட மாடல் அரசை வழிநடத்தி வருகிறார் நமது பாராட்டுக்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள்.
அந்நிகழ்வில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் திறந்து வைத்தும் சிறப்பித்துள்ளார்.
திருச்சி மாநகரின் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக அமையவிருக்கும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி ஆகியோருக்கும் நமது பாராட்டுகள்!
தலைவர், திராவிடர் கழகம்