கருத்துரிமையைப் பறிப்பதா? பத்திரிகை சுதந்திரத்தை நசுக்குவதா?

1 Min Read

தமிழர் தலைவர் கண்டனம்

’தி வயர்’ இணைய ஏடு வெளியிட்ட செய்தி ஒன்றுக்காக ஒன்றிய அரசு அதனை முடக்கியுள்ளது கருத்துரிமையின் மீதான தாக்குதலாகும். மறைமுகமாக பல மிரட்டல்களை விடுக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, வெளிப்படையாகவும் இப்படி இணையதள முடக்கங்களையும் ஏற்படுத்துகிறது. சிலநாள்களுக்கு முன் தமிழ்நாட்டின் விகடன் ஏடு இதே போன்ற நிலைக்கு ஆளானது. எந்த நிலையிலும் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது. ஒருபோதும் அதை ஏற்க முடியாது. (‘தி வயர்’ ஏடு ஒரு சில பகுதிகளில் மட்டும் இப்போது தெரிய ஆரம்பித்திருக்கிறது.) ஊடகங்களை மிரட்டிப் பணிய வைக்க முயற்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு நமது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

(கி.வீரமணி)
தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *