கோவிலை சாம்பலாக்கிய ‘அக்னி பகவான்’

1 Min Read

உஜ்ஜெயினி, மே 11 மகாகாளேஸ்வரர் சிவன் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினியில் உள்ளது.
இந்த கோவிலில் கண் காணிப்புக் கருவிகள் (சிசிடிவி) உள்ள கட்டுப் பாட்டு அறையில் திடீ ரென தீ ஏற்பட்டது. இத னைக்கண்ட கோவில் நிர் வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத் திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
இந்த கட்டுப்பாட்டு அறையில் உள்ள பேட் டரி வெடித்து அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தீ விபத்து பக்தர்கள் மற்றும் அங்குள்ள கடைக்காரர்கள் மத்தியில் அச்சத்தையும், பர பரப்பையும் ஏற்படுத்தியது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *