உஜ்ஜெயினி, மே 11 மகாகாளேஸ்வரர் சிவன் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினியில் உள்ளது.
இந்த கோவிலில் கண் காணிப்புக் கருவிகள் (சிசிடிவி) உள்ள கட்டுப் பாட்டு அறையில் திடீ ரென தீ ஏற்பட்டது. இத னைக்கண்ட கோவில் நிர் வாகத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத் திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.
இந்த கட்டுப்பாட்டு அறையில் உள்ள பேட் டரி வெடித்து அதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் யாருக்கும் காயமோ உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த தீ விபத்து பக்தர்கள் மற்றும் அங்குள்ள கடைக்காரர்கள் மத்தியில் அச்சத்தையும், பர பரப்பையும் ஏற்படுத்தியது.
கோவிலை சாம்பலாக்கிய ‘அக்னி பகவான்’
Leave a Comment