குடவாசல், மே 10- திருவாரூர் மாவட்டம், குடவாசல் ஒன்றியம் திப்பன்ண பேட்டையில், ஒன்றிய தலைவர் ந.ஜெயராமன் இல்லத்தில் 08.05-2025 காலை 11.00 மணியளவில் ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
குடவாசல் கழக ஒன்றிய தலைவர் ந.ஜெயராமன் தலை மையில் மாவட்ட தலைவர், சு.கிருஷ்ணமூர்த்தி மாநில இ.செயலாளர் நாத்திக.பொன்முடி மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மஞ்சக்குடியில் புதிதாக கட்டபட உள்ள பெரியார் சிலை அமைப்பது தொடர்பாக தீர் மானிக்கபட்டது..
தீர்மானங்கள்
நெய்க்குப்பை உத்திராபதி, புதுக்குடி சீனிவாசன், அன்னவாசல் கலியன் ஆகியோருக்கு ஆழ்ந்த இரங் கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
குடவாசல், மஞ்சக்குடியில் அமைய உள்ள தந்தை பெரியார் முழு வெண்கலச் சிலை மற்றும் கல்யாணி, கணபதி , சிவானந்தம் நினைவு படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் தந்தை பெரியார் சிலை அமைப்பு குழு அமைக்கப்படுகிறது.
ஒருங்கிணைப்பாளர்கள்
வீ.மோகன் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்
சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர்
சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்
சிலை அமைப்பு குழு தலைவர்
ந.ஜெயராமன் ஒன்றிய தலைவர்
சிலை அமைப்பு குழு செயலாளர்கள்
க.வீரையன் மாவட்ட விவசாய தொழிலாளரணி செயலாளர், சி.அம்பேத்கர் ஒன்றிய துணைத் தலைவர், க.அசோக்ராஜ் ஒன்றிய செயலாளர், நா. செல்வகுமார் அ.சா.ஒ. செயலாளர், செ. ரவிக்குமார். ஒன்றிய இளைஞரணி செயலார், பொருளாளர் வீர.கோவிந்தராஜ் மாவட்ட காப்பாளர்
உறுப்பினர்கள்-
ந.ராஜேந்திரன் ஒ.ப.க.தலைவர் பெரும்பனையூர் வீரா, உ.பாண்டியன் நெய்க்குப்பை, அ. அறிவு சுடர். மா. இ. அணி, க. இராவணன். ஒ. அமைப்பாளர் அ.சவுந்தராஜன்
தீர்மானம்
சென்னையில் நடைபெற உள்ள மாநில மகளிரணி, இளைஞரணி மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் குடவாசல் ஒன்றியத்திலி ருந்து 10 இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி தோழர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் வீ.மோகன், மாவட்ட தலைவர் சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட காப்பாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட விவசாயணி செயலாளர் க.வீரையன், ஒன்றிய துணைத் தலைவர் சி.அம்பேத்கர், ஒன்றிய செயலாளர் க. அசோக்ராஜ், ஒன்றிய தொழிலாளரணி செயலாளர் நா. செல்வகுமார், க.இராவணன், ப.வீராச்சாமி. ஒன்றிய இளைஞரணி செயலார் செ.ரவிக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெ.மண்டோதரி, குடவாசல் ஒன்றிய செயலாளர் கணபதி.அசோக் ராஜ் அவர்கள் ரூபாய் 10,000 வழங்கி உள்ளார்