புதுடில்லி, மே 10 எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாமை அழித்தது.
பாகிஸ்தான் தாக்குதல்
எல்லையில் பாகிஸ்தான் அடுத்தடுத்து ட்ரோன் தாக்குதல் நடத்துவதால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத்துக்கு ‘அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை நடத்தினார். சண்டிகரில் ‘சைரன்கள்’ ஒலிக்கப்பட்டதால் வீடுகளில் மக்கள் தஞ்சமடைந்ததால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் அதிரடியால் ஆடிப்போன பாகிஸ்தான், தற்போது எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லைகளில் போர் விதி மீறல்களை அரங்கேற்றி வருகிறது. நேற்று முன்தினம் இரவு ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொள்ள முயன்றது.
ஆனால் இந்தியாவின் எஸ்-400 சுதர்ஷன் சக்ரா என்ற வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த எதிர்-யுஏஎஸ் கட்டமைப்பு, ஜம்மு, பதான்கோட், உதம்பூர், ஜெய்சல்மர், புஜ் உள்ளிட்ட 15 இடங்களை குறிவைத்த 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளை இடைமறித்து வெற்றிகரமாக அழித்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதல்களால் எந்த உயிரிழப்பு அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் குறிவைத்த 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் எட்டு ஏவுகணைகளை இடைமறித்து வெற்றிகரமாக அழித்தது. இந்திய பாதுகாப்பு அமைச்சகம், இந்த தாக்குதல்களால் எந்த உயிரிழப்பு அல்லது பொருள் சேதமும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தியது.
உயர் எச்சரிக்கை
பாகிஸ்தானின் இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்கள் உயர் எச்சரிக்கையில் (அலர்ட்) வைக்கப்பட் டுள்ளன. பஞ்சாபில் அமிர்தசரஸ், தரன் தரன், குருதாஸ்பூர், ஃபெரோஸ்பூர், ஃபாஸில்கா மற்றும் பதான்கோட் மாவட்டங்களில் பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. ராஜஸ்தானில் பார்மர், ஜெய்சல்மர், ஜோத்பூர், பிக்கானீர் மற்றும் சிறீகங்காநகர் மாவட்டங்களில் இரவு நேரத்தில் முழு மின்தடை (பிளாக் அவுட்) அமல்படுத்தப்பட்டு, ட்ரோன் பறப்பதற்கும் பட்டாசு வெடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புஜ் மற்றும் கட்ச் மாவட்டங்களில் எல்லைப் பாது காப்பு தீவிரப்படுத்தப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில் சம்பா, ரஜோரி மற்றும் ஆர்.எஸ்.புரா பகுதிகளில் முழு மின்தடை மற்றும் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளன.
பதற்றம்
இந்த ரெட் அலர்ட் உத்தரவுகளானது, பாகிஸ்தானின் தொடர்ச்சியான தாக்குதல் முயற்சிகளுக்கு எதிரான முன்னெச்சரிக்கையாக அமைந்துள்ளது. இந்திய ராணுவம், நேற்று பாகிஸ்தான் ட்ரோன்களை முறியடித்த காட்சிப் பதிவுகளை வெளியிட்டு, தனது தொழில்நுட்ப திறன் மற்றும் தயார் நிலையை வெளிப்படுத்தியது. இருப் பினும், பாகிஸ்தானின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம், மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதனால் எல்லையோர மாநில பதற்றங்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை போருக்கு முந்தைய எச்சரிக்கை ஒலியாக, சண்டிகரில் வான்வழி எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டது. மக்கள் வீட்டிற்குள் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றங்கள் தீவிரமடைந்த நிலையில், விமானப்படை நிலையத்திலிருந்து பதிலடி தாக்குதல் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், இந்த சைரன் ஒலி நடவடிக்கை எடுக்கப்பட்டது. சண்டிகர் துணை ஆணையர் நிஷாந்த் குமார் மக்கள் அனைவரும் வீடுகளின் உட்புறங்களில் இருக்கவும், பால்கனிகளைத் தவிர்க்கவும் அறிவுறுத்தினார்.
போர் ஒத்திகை
மக்கள் பீதியடைய வேண்டாம் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டாலும், சண்டிகரில் ரெட் அலர்ட் விடுக்கப் பட்டதால் மக்கள் அச்சத்தில் உள் ளனர். நாடு முழுவதும் ேபார் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று டில்லியில் முப்படை தளபதி களுடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
தலைவர்கள் ஆலோசனை
அப்போது, இந்தியா-பாகிஸ்தான் இடையேயான எல்லைப் பதற்றங்கள், ஆபரேஷன் சிந்தூரின் பதிலடி நட வடிக்கைகள், பாகிஸ்தானின் ட்ரோன், ஏவுகணைகளை வீழ்த்தியது குறித்தும், அடுத்தகட்ட பதிலடி குறித்தும் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் எல்லைப் பாதுகாப்பு, ராணுவத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள், பாகிஸ்தானின் சாத்தியமான பதிலடி களை எதிர்கொள்ளும் உத்திகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் பிரதமர் மோடியின் தலைமையில், பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவும் நேற்று காலை கூடியது. இந்த கூட்டத்தில் ராஜ்நாத் சிங் முக்கிய பங்காற்றினார். ஆபரேஷன் சிந்தூரின் தற்போதைய நிலை, பாகிஸ்தானின் லாகூர், சியால்கோட் பகுதிகளில் இந்தியாவின் பதிலடி தாக்குதல்கள், எல்லையோர மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது.இந்த ஆலோசனைகள், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு உறுதிப்பாட்டையும், எல்லையில் தொடர்ந்து நிலவும் பதற்றங்களை கையாள்வதற்கான உத்தி யையும் வகுத்ததாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
தீவிரவாத முகாம் அழிப்பு
எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாத முகாம் செயல்பட்டு வந்தது. அங்கு இருந்துதான் தீவிரவாதிகள் சிறீநகரில் குடியிருப்பு பகுதியில் அப் பாவி மக்கள்மீது குண்டு வீசி வந்தனர். இந்த தீவிரவாத முகாமை இந்திய ராணுவத்தினர் குண்டு வீசி அழித்தனர்.
மேலும் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் உள்ள 26 இடங்களில் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அனைத்து அத்துமீறல்களையும், நமது ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு பதிலடியாக இந்திய ராணுவத்தினர் இன்று காலை பாகிஸ்தானில் உள்ள சியால்கோட் விமானத்தளத்தின்மீது தாக்குதல் நடத்தியது. அங்குள்ள ரேடார் நிலையமும் தகர்க்கப்பட்டது.
சியால் கோட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரோஷி தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரி உள்பட 5 பேர் பலி
இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்கதல் நடத்தியாக இந்திய ராணுவம் முறியடித்தனர். ஜம்முவில் அரசு அதிகாரி ஒரு பெண் உள்பட 5 பேர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் பல கட்ட டங்கள் வழிபாட்டுத்தலங்களும் சேத மடைந்துள்ளன.
இந்தியா மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் ‘ஆபரேஷன் பன்யான் உன் – மர்சூஸ்’ என பெயரிட்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை முதல் ஏவுகணைகளை வீசி தாக்க முயன்றதை இந்திய ராணுவம் முறியடித்தாக கர்னல் சோபியா குரோஷி விளக்கம் அளித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கியால்கார்ட் பகுதியில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கர்னல் சோபியா குரோஷி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அமைச்சர் பேச்சு
இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றத்தை தணிக்க இன்று காலை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். தீவிர வாதத்திற்கு எதிரான இந்தியா வின் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்த தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மோடி இன்று அவசர ஆலோசனை
டில்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மோடியுடன் இன்று ஆலோசனை நடத்தினார். நேற்று குடியிருப்பு பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.இதற்கு பதிலடி கொடுத்த நிலையில், இந்தியாவின் தாக்குதலை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. முப்படை தளபதிகளுடனும் பிரதமர் மோடி இந்த ஆலோசனை நடத்தினார்.