பெங்களூருவில் மே நாள் விழா

Viduthalai
1 Min Read

பெங்களூரு, மே 10– கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் மற்றும் நிமிர் இலக்கிய வட்டம் இணை புரட்சிக்கவிஞர் மற்றும் மே நாள் தமிழர் நாள் விழா மிகச் சிறப்பாக காணொலி வழியே நடைபெற்றது.

கருநாடக மாநிலத் திராவிடர் கழக செயலாளர் இரா.முல்லைக்கோ தலைமையில் 5.5.2025 அன்று மாலை இணைய வழியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ் வாழ்த்தினை கவிஞர் சுசித்ராவும், புரட்சிக்கவிஞர் பாடலை கவிஞர் பாலாமணியும் பாடினர். நிகழ்வினை அறிமுகவு ரையுடன் பேரா.கவிஞர் கிருட்டிண குமாரி ஒருங்கிணைத்தார்.

சிறப்புக் கவியரங்கம்

புரட்சிக்கவிஞர் மற்றும் மே நாள் குறித்த சிறப்புக் கவியரங்கம் நடைபெற்றது. மூத்த கவிஞர் இரா.சண்முகம், கவிஞர் அமிர்தவல்லி, கவிஞர் சுசித்ரா சிறப்புமிகு பாடல்களைப் பாடினர்.

வாழ்வியல் நிகழ்வு

பெங்களூர் தமிழ்ச்சங்க துணைத் தலைவர் அமுதபாண்டியன் பாவேந்தரின் வாழ்வியல் நிகழ்வு களையும், அவரது பாடல்களையும் ஏற்றமிகு இசையோடு பாடி, சிறப்புரை நிகழ்த்தினார்.

மே நாள் குறித்து எழுத்தாளரும், தமிழ்நாடு அரசு நீர் வளத்துறை உதவி செயற்பொறியாளர் பொள் ளாச்சி கோ.லீலா அம்மையார் நெடிய உரையை விளக்கி, உழைப் பாளர், மகளிர் குழு வெண்மணி நிகழ்வுகளை விளக்கி உரை நிகழ்த் தினார். நிகழ்வில் கவிஞர் செந்தமிழ் விஜயன், இரா.இராசாராம், புருசோத்தமன், புரா தலைவர் கோ.சண்முகம், மற்றும் கவிஞர்கள் கருத்துரை வழங்கினர். நிமிர் இலக்கிய வட்டத்தின் நிறுவனர் பாவலர் கா.பாபு சசிதரன் நிகழ்வின் அனைவரின் உரையைக் குறித்தும் நிறைவுரை நிகழ்த்தினார்.

நிறைவாக கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் வழக்குரைஞர் பாவலர் சே.குணவேந்தன் பாவேந்தரின் அரிய பாடல்களை இசைத்து, நன்றி கூறி நிகழ்வினை நிறைவு செய்தார்.

நிகழ்வில் இணைய வழியே லண்டன், அமெரிக்கா, மலேசியா வாழ் தமிழர்களும் ஏராளமான அறிஞர் பெருமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *