டில்லியில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில்

viduthalai
3 Min Read

நாட்டின் நலன் கருதி அனைவரும் ஒப்புதல்

டி.ஆர்.பாலு பேட்டி

புதுடெல்லி, மே.9- டில்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தி.மு.க. சார்பில் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு  பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது

இந்திய அரசு ஒரு தனிப் பட்ட மதத்தை தாக்காமல்,மன்றம் பயங்கரவாத இயக்கத்தையும், அதன் ஆதரவாளர்களை யும் மட்டுமே கண்டறிந்து தண்டனை வழங்க வேண் டும் என்று தி.மு.க. சார்பி லான கருத்தை கூட்டத்தில் நான் தெரிவித்துக் கொண் டேன். ஒரு குறிப்பிட்ட மதத்தை மனதில் வைத்துக் கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. அதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.

மத விஷயம் பற்றி நான் வலியுறுத்தியதற்கு, நாடாளுமன்றம் போல உடனடியாக பதில் தெரிவிக்க மாட்டார்கள். நாங்கள் அதை எடுத்துச் சொல்லி இருக்கிறோம். ஏனென்றால் பொதுவாக இந்த அரசாங்கம் மதம் சார்ந்தே பேசுகிறது. அதற்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறது. எனவே மதச்சார்பற்று இருக்க வேண்டும் என தி.மு.க. சார்பில் வலியுறுத்தி னோம். கூட்டத்தில் பங்கேற்ற யாரும் எதிராக இல்லை. காங்கிரஸ், தி.மு.க. மற்றும் மேலும் சில கட்சிகளும் பிரதமர் ஏன் இதில் பங்கேற்கவில்லை என கேட்டோம். மற்றபடி நாட்டின் பாதுகாப்பு கருதி எல்லோரும் ஒற்றுமையாக கருத்து தெரிவித்தனர்.அரசின் எந்த செயல்பாட்டையும் தவறு என்று நாங்கள் கூட்டத்தில் சொல்லவில்லை. ஆனால் மதவாதம் வேண்டாம் என்பது பற்றி தி.மு.க. சார்பில் நான் வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்

புதிய போப்பாக
ராபர்ட் ப்ரீஒஸ்ட் தேர்வு

அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப்

வாடிகன் சிட்டி, மே.9- புதிய போப்பாக அமெரிக்க கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீஒஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். அவர்
14-ஆம் லியோ என அழைக்கப்படுவார். இவர் அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் போப் ஆவார்.

போப் தேர்வு

உலகம் முழுவதும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21-ஆம் தேதி உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

எனவே புதிய போப்பை தேர்வு செய்வதற் கான கார்டினல் கான்கிளேவ் எனப்படும் கர்தினால் மாநாடு நேற்று முன்தினம் (7.5.2025) தொடங்கியது.

வாடிகனில் உள்ள சிஸ்டைன் சிற்றாலயத்தில் நடந்த இந்த நிகழ்வில் புதிய போப்பை  தேர்வு செய்வதற்கு தகுதி வாய்ந்த 133 கார்டினல்கள் கூடினர். முதல் நாளான 7.5.2025 அன்று முதல் வாக்கெடுப்பு நடந்தது.

முதல் நாளில் கரும்புகை

இதில் 3-இல் 2 பங்கு ஆதரவு அதாவது 89 வாக்குகள் யாரும் பெறாததால் புதிய போப் தேர்வாகவில்லை. இதை புகைபோக்கி வழியாக கரும்புகை வெளியிட்டு உலகுக்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் நேற்று (8.5.2025) காலையில் நடந்த 2 வாக்களிப்பிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

எனவே மாலையில் மீண்டும் கார்டினல்கள் கூடி புதிய போப்பை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த முறை புதிய போப்  தேர்வானார். இது சிஸ்டைன் சிற்றாலய புகைபோக்கியில் வெண்புகையை வெளியிட்டு உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டது.

அமெரிக்க கார்டினல்

அப்போது வாடிகன் புனித பீட்டர் சதுக்கத்தில் கூடியிருந்த லட்சக்கணக்கான கிறித்தவர்கள் கைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மேலும் புதிய போப்   யார்? என்பதை அறிய ஆவலுடன் காத்திருந் தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் புனித பீட்டர் பேராலய பால்கனியில் தோன்றிய கார்டி னல்கள் புதிய போப்  தேர்வு செய்யப்பட் டதை (ஹேபிமுஸ் பாப்பம்) அறிவித்தனர்.

அதாவது அமெரிக்காவை சேர்ந்த கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரீஒஸ்ட்  (வயது 69) கத்தோலிக்கர்களின் 267-ஆவது போப்பாக தேர்வு செய்யப்பட்டார் என்பதையும், அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என்றும் அறிவித்தார்.

அமெரிக்காவில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்ட முதல் போப் ராபர்ட் ப்ரீஒஸ்ட்க்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரி வித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *