தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, மே 9- வாகன ஓட்டிகள், பயணிகள் வசதிக்காக அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கழிப்பறை பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுங்கச்சாவடியில்
கழிப்பறை
கழிப்பறை
சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் இஸ்மாயில் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 30.8.2024 அன்று சூரப்பட்டு சுங்கச்சாவடி வழியாக காரில் வந்தேன். அப்போது, கழிப்பறை செல்வதற்காக சுங்கச்சாவடி ஊழியரிடம் கேட்ட போது சற்று தொலைவில் இருப்பதாக கூறினார். ஆனால், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கழிப்பறை இருந்தது.
அதேவேளையில் கழிப்பறையை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டப் பட்டு இருந்தது. இதன்காரண மாக, என்னால் கழிப்பறை செல்ல முடியவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 11.2.2021 அன்று வெளியிட்டுள்ள வழி காட்டுதலில், ‘நீண்டதூர பயணத்தில் ஏற்படும் சோர்வை குறைத்து பாது காப்பான பயணத்தை மேற்கொள்ள வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகளுக்கு சுங்கச்சாவடிகளில் கழிப்பறை, ஓய்வறை உள்ளிட்ட குறைந்தபட்ச வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்’ என தெரி வித்துள்ளது.
சேவைக் குறைபாடு
ஆனால், சூரப்பட்டு சுங்கச் சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அப்பால் கழிப்பறை அமைத்திருப்பது மட்டு மல்லாமல், அதைபூட்டி வைத்திருப்பது சேவை குறைபாடு ஆகும். எனவே, ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், ராமமூர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சூரப்பட்டு சுங்கச்சாவடியை பொறுத்த மட்டில் சற்று தொலைவில் கழிப்பறைவசதி அமைக்கப்பட்டு உள்ளது. எப்படி இருந்தாலும் ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படி, இங்கு கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறோம்.
உறுதிசெய்ய வேண்டும்
ஆனால், கழிப்பறை பூட்டப்பட்டு இருப்பதன் மூலமும், கழிப்பறைக்கான சாவியை மனுதாரருக்கு வழங்காததன் மூலமும் வாகன ஓட்டிகள், பயணிகளுக்கான சேவை முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இந்த சேவை குறைபாட்டுக்காக சூரப்பட்டு சுங்கச்சாவடியை நிர்வகித்து வரும் நிறுவனம் மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.2 ஆயிரமும் வழங்க வேண்டும்.
அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனா ளிகளுக்கு தனித்தனி கழிப்பறைகள் இருப்பதையும், இவை எப்போதும் பயன்பாட்டில் இருப்பதையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.