திருச்சி மாநகர் பஞ்சப்பூரில், தந்தை பெரியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்தார்!

viduthalai
1 Min Read

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (9.5.2025) திருச்சி மாநகர், பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில், 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, அங்கு அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்வின்போது, நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர்  எஸ்.எஸ். சிவசங்கர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  அன்பில் மகேஸ் பொய்யாமொழி,   பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்   சிவ.வீ, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்  திருச்சி சிவா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர்  மு.அன்பழகன், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், நகராட்சி நிருவாக இயக்குநர்  எஸ். சிவராசு,  திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர்  மா. பிரதீப் குமார்,  உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *