பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு

2 Min Read

புதுடில்லி, ஜூன் 30 நாட்டில் உள்ள பல்வேறு அமைப்புகள் பொதுச் சிவில் சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒன்றிய பாஜக அரசு அனைத்து தரப்பினருக்கும் பொதுவான பொது சிவில் சட்டம் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறது.  இதற்காக 22-ஆவது ஒன்றிய சட்ட ஆணையம் பொதுமக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டுள்ள மத அமைப்புகளின் கருத்துகளைக் கேட்க உள்ளது.

பிரதமர் மோடி மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பேசியபோது, “2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது எனவும் பொது சிவில் சட்டம் அவசியம் எனவும் திட்டவட்டமாக கூறியது, பேசுபொருளாக மாறி  உள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

கபில் சிபல் எம்.பி. (தலைவர், ‘இன்சாப்’):- பிரதமர் பொது சிவில் சட்டம் வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். முஸ்லிம்களை எதிர்க்கட்சிகள் தூண்டி விடு கின்றன எனவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதை யொட்டி சில கேள்விகள் எழுகின்றன. 9 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இது ஏன்? (2024 தேர்தலுக்காகவா?). உங்கள் திட்டம் இந்துக்கள், பழங்குடியினர், வடகிழக்கு மாநிலத்தவர் என அனைவருக்கும் சீராக இருக்குமா? ஒவ்வொரு நாளும் உங்கள் கட்சி முஸ்லிம்களைக் குறி வைத்தது. இப்போது ஏன் கவலை?

பரூக் அப்துல்லா (தலைவர், தேசிய மாநாடு கட்சி):- பொது சிவில் சட்டம் கொண்டு வருவது பற்றி ஒன்றிய அரசு மறுசிந்தனை செய்ய வேண்டும். இது பன்முகத் தன்மை கொண்ட நாடு ஆகும். இங்கே பல்வேறு இனங்கள், மதங்களைப் பின்பற்றுகிற மக்கள் வாழ் கிறார்கள். முஸ்லிம்களுக்குத் தனியாக சரியத் சட்டம் உள்ளது. எனவே பொது சிவில் சட்டத்தை அமல்படுத் தினால் ஏற்படும் விளைவுகளை சிந்திக்க வேண்டும்.

ஹர்ஜிந்தர் சிங் தாமி (தலைவர், சிரோமணி குருத் துவாரா பிரபந்த கமிட்டி): பொது சிவில் சட்டத்தையும், அதை அமல்படுத்துவதையும் சிரோமணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி கடுமையாக எதிர்க்கிறது. பொது சிவில் சட்டத்தால் பாரம்பரியங்கள், கலாச்சாரங்கள். சிறுபான்மையினரின் தனித்துவ அடையாளம் சிதைந்து போக வாய்ப்பு உள்ளது  எனத் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *