உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொத்து விவரம்: இணையத்தில் வெளியீடு

1 Min Read

புதுடில்லி, மே 8 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரம் இணையத்தில் வெளி யிடப்பட்டுள்ளது. மற்ற நீதிபதி களின் சொத்து விவரம் விரை வில் வெளியிடப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சொத்து விவரம்

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 21 பேரின் சொத்து விவரத்தை உச்ச நீதிமன்றம் அதன் இணைய தளத்தில் 5.5.2025 அன்று  வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரத்தை தெரிவித்துள்ளனர். மேலும் பீலா எம்.திரிவேதி, பி.வி.நாகரத்னா ஆகிய பெண் நீதிபதிகளில் பீலா திரிவேதி சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ஆம் தேதி பணி ஓய்வுபெற இருக்கும் நிலையில் இந்த விவரம் வெளியாகியுள்ளது. மேலும் உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக நீதிபதிகளின் சொத்து விவரம் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

இணையத்தில் வெளியீடு

இதுகுறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதிகளின் சொத்து விவரத்தை பொதுவெளியில் வெளியிட கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முழு நீதிமன்றமும் முடிவு செய்தது. இதன்படி இதுவரை பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்துவிவரம் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பிற நீதிபதிகளின் சொத்து விவரம் பெறப்பட்ட உடன் பதி வேற்றம் செய்யப்படும்” என்று கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்காக…

உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகளின் முழு நியமன நடைமுறைகளையும் உச்ச நீதிமன்றம் பகிர்ந்துகொண்டுள்ளது. இதில் நீதிபதிகள் நியமனத்தில் உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பங்கு, உச்சநீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்காக ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் அளிக்கும் தகவல்களின் பங்கு உள்ளிட்ட விவரம் இடம் பெற்றுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *