கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் உள்ளிட்ட 330 காலி பணியிடங்களுக்கு 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

1 Min Read

சென்னை, மே 8- கால்நடை உதவி மருத்துவர், உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு), உதவி இயக்குநர் (புள்ளியியல்) உள்ளிட்ட 32 பதவிகளுக்கான 330 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

நேர்முகத் தேர்வுகள் கொண்ட இந்தப் பணியிடங்களுக்கு வருகிற  மே 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் (ஜூன்) 11ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.

இந்தப் பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு ஜூலை மாதம் 20ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கிறது. ஒருங்கிணைந்த தொழில் நுட்பப் பணிகள் தேர்வு எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு என 2 நிலைகளை கொண்டது. எழுத்துத் தேர்வை பொறுத்தவரையில், தமிழ் தகுதித்தேர்வு, பொது அறிவு மற்றும் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு தரத்தில் வினாக்கள் இடம்பெறும். எழுத்து, நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் தேர் வர்களின் தரவரிசையை தீர்மானிக்கும் என்றும், தேர்வர்களின் நலன் கருதி முதல் முறையாக பாடத்திட்டத்தில் அலகு வாரியாக கேட்கப்படும் கேள்விகளின் எண்ணிக்கை இந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி. எஸ்.சி.) தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *