சென்னை, மே 8 அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியாகி உள்ளது. அதில் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் துரைமுருகனுக்குக் கூடுதலாக சட்டத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அவர் இனி நீர்வளத்துறையுடன் சட்டத்துறையையும் நிர்வகிப்பார்.
மேலும், துரைமுருகனிடம் இருந்த கனிமம் மற்றும் சுரங்கத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தத் துறை மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவை மீண்டும் மாற்றம்

Leave a Comment