பேராசிரியர் கு.வணங்காமுடியின் இறுதி நிகழ்வு கழகத் தோழர்கள் பங்கேற்று மரியாதை

viduthalai
1 Min Read

ஓசூர், மே 7– பெரியார் பெருந் தொண்டர் ஒசூர் மாவட்ட கழக காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி உடல் நலம் குன்றியநிலையில் ஒசூர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு (1.5.2025) சிகிச்சை பெற்று வந்த நிலையில் 05.05.2025 இரவு 11.45 மணிக்கு மறைவுற்றார்.

நேற்று (6.5.2025) அவரது உடலுக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை.ஜெயராமன், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் ஆகியோர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

பிற்பகல் 4.00 மணிக்கு அவரது இல்லத்தில் கழக சார்பில் இரங்கல் கூட்டம் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடைபெற்றது.இரங்கல் கூட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், பாவலர் அறிவுமதி,பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் அண்ணா சரவணன்,செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி, மதிமுக மாவட்ட செயலாளர் பாசறை பாபு, நகர் செயலாளர் கண்ணதாசன், அறிவரசன், கிருஷ்ணகிரி மாவட்ட கழக தலைவர் கோ.திராவிடமணி, திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், கழக பொதுக்குழு உறுப்பினர் அ.செ.செல்வம், கருநாடக மாநில திராவிடர் கழகம் சார்பில் அமுதபாண்டியன், கருமலைத்தமிழாழன், வரலட்சுமி, ஆர்.துரை, ஆடிட்டர் பாலசுந்தரம் ஆகியோர் இரங்கல் உரையாற்றினார்கள்.

அவரது உடல் கிருஷ்ணகிரி சர்வீசஸ் ரோட்டில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *