மறைவு

1 Min Read

திருச்சி- பிச்சாண்டார் கோவில், நெம்பர் 1 டோல்கேட் பகுதி தலைவர்  போஸ்டல் ராமசாமி (வயது 93) வயது மூப்பின் காரணமாக நேற்று (06.05.2025) மாலை 3 மணியளவில் மறைவுற்றார்.

அவருக்கு  மாவட்ட , ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் மற்றும்  தோழர்கள் அனைவரும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தினர். வாழ்விணையர் கோமதியம்மாள், மகன்கள்: கரிகாலன், ராஜன், செல்வராஜ், கென்னடி, மகள்கள்: அமுதா, வாசுகி ஆகியோரைக் கொண்ட இவர்களது குடும்பமே பெரியாரின் கொள்கைக் குடும்பம்  ஆகும்.

போஸ்டல் ராமசாமி அஞ்சல் துறையில் அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

இன்று (07.05.2025) மாலை 3 மணியளவில்
கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவ கல்லூரிக்கு  அவரது  உடல் கொடையாக வழங்கப்பட்டது.

தொடர்புக்கு: இளைய மகன் செல்வராஜ், 98656 22152

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *