இந்தியா – பாகிஸ்தான் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்

1 Min Read

அய்.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

நியூயார்க், மே 7 இந்தியாவும், பாகிஸ்தானும் பதற்றத்தை தணிக்க நிதானத்தை கடைப் பிடிக்க வேண்டும். பிரச்சினை களுக்கு ராணுவம் மூலம் தீர்வு கிடைக்காது என்று அய்.நா. பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டெரெஸ் தெரி வித்துள்ளார்.

அய்.நா. பாதுகாப்பு
கவுன்சில் கூட்டம்

காஷ்மீர் மாநிலம் பஹல் காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகளால், கலக்கமடைந்த பாகிஸ்தான், இந்த விவகாரம் தொடர்பாக விவாதிக்க அய்க்கிய நாடுகள் சபையில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கூட்டுமாறு கோரியது. இதைத் தொடர்ந்து அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கூட்டம் நேற்று முன்தினம் (5.5.2025) நடந்தது.  இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு அய்.நா. பொதுச் செயலாளர் அன் டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிதானத்தை
கடைப்பிடிக்க வேண்டும்

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் நீண்ட காலமாக உள்ளன. அதே நேரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் கண்டனத்துக்குரியது. அதில் பலியானவர்களுக்கு எனது இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன். எந்த காரணத்துக்காகவும் பொது மக்களின் மீதான பயங்கரவாத தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது.

சமீபத்திய பிரச்சினையால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. பிரச்சினைகளுக்கு ராணுவம் மூலம் தீர்வு ஏற்படாது. எனவே இருநாடுகளும் அதிக பட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். பதற்றத்தை தணிக்க முன்வர வேண்டும். எந்த தவறும் செய்யாதீர்கள். ராணுவத்தீர்வு ஒரு தீர்வாகாது. இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *