அதிர்ச்சி செய்தி ஓசூர் மாவட்ட கழகக் காப்பாளர் பேராசிரியர் கு.வணங்காமுடி மறைவு

1 Min Read

நமது வீர வணக்கம்

ஓசூரில் ஒரு சிறு தொழிலபதிராக வளர்ந்து வந்தவரும், மாவட்ட திராவிடர் கழகக் காப்பாளராகவும் இருந்து வந்தவரும், சீரிய தமிழ்ப் பற்றாளராகவும், இனமான மொழி உணர்வு படைத்த தமிழ் வித்தகருமான மானமிகு தோழர் கு. வணங்காமுடி  (வயது 74) அவர்கள்  திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு (5.5.2025) 11.45 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தி கேட்டு, வெளியூரிலிருந்து சென்னை திரும்பியதும் மிகுந்த அதிர்ச்சிக்கும், ஆழ்ந்த துயரத்திற்கும் ஆளானேன்.

தந்தைபெரியார்பற்றி பல நூல்களை எழுதியவர்.

செங்கத்திலும், ஓசூரிலும் கல்வி நிலையங்கள் நடத்தியவர்; சிறந்த பகுத்தறிவுவாதி, இன உணர்வாளர். சில வாரங்கட்கு முன்பு, புரட்சிக் கவிஞர் பிறந்த நாள் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ் வார விழாவாகக் கொண்டாட வேண்டுமென விடுத்த வேண்டுகோளுக்காகவும், அதை பிரகடனப்படுத்திய முதலமைச்சருக்கும் நாம் அனைவரும் சென்று நன்றி செலுத்திப் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்று உணர்வு பூர்வ வேண்டுகோள் விடுத்தார்.

பகுத்தறிவுப் புலவர் தோழர் மா. நன்னன் அவர்களது மதிப்பிற்குரிய மாணவராக இருந்து நல்ல உணர்வுகளைப் பெற்றுத் தொண்டறச் செம்மலாக இருந்தவர். தலைசிறந்த பெரியாரிஸ்ட்.

அவரது அகால மறைவு நம்மைப் பெரிதும் துன்புறுத்துகின்றது.

அவரை இழந்து வாடும் அவரது வாழ்விணையர் திருமதி விஜயலட்சுமி, மகள்கள் சிந்து, இலக்கியா, மருமகன் சைத்தன்யா ஆகியோருக்கும், குடும்பத்தாருக்கும் அவரது நீண்ட வட்ட நண்பர்களுக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிக்கிறோம்.

அவருக்கு நமது வீர வணக்கம்.

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்

சென்னை 
6.5.2025     

குறிப்பு: அவரது இறுதி நிகழ்வில் மாநில  கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன், திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி.எழிலரசன் மற்றும் ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் ஆகியோர் தலைமையில்  வீர வணக்கம் செலுத்தப்படும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *