மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை குழு தலைவராக ஜான் பிரிட்டோஸ் நியமனம்

1 Min Read

புதுடில்லி, மே 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலங்கள வைக்குழு தலைவராக இருந்தவர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா. இவர் அந்த பதவியில் இருந்து விலகி உள்ளார். எனவே துணைத் தலைவராக இருந்த ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்ற உறுப்பினரை கட்சியின் மாநிலங் களவைக்குழு தலைவராக மேலி டம் நியமித்து உள்ளது. கேரளாவை சேர்ந்த நாடாளு மன்ற உறுப்பினரான ஜான் பிரிட்டாஸ், நாடாளுமன்றத்தில் நடக்கும் விவாதங்களில் ஆவே சமாக கருத்துகளை பதிவு செய்யக்கூடியவர். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஒன்றிய அரசை சரமாரியாக கேள்வி எழுப்பி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். அவர் மாநிலங்க ளவைக்குழு தலைவராக நிய மித்து இருப்பதை கட்சியினர் வரவேற்று உள்ளனர். தற்போது அவர் வெளியுறவுத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உள்பட பல்வேறு குழுக்களில் அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *