கேலோ இந்தியா திட்டத்தின்கீழ் குஜராத், உத்தரப் பிரதேசத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு

1 Min Read

புதுடில்லி, மே 3  ஒன்றிய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் அதிக அளவிலான நிதியை பெறுவது அம்பலம் ஆகி உள்ளது. விளையாட்டின் தலைநகர மாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு மிகவும் சொற்ப அளவிலான நிதியை மட்டுமே வழங்கி உள்ளதும் தெரிய வந்துள்ளது.

ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம் பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் திட்டமான கேலோ இந்தியா 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் நாடு முழுவதும் விளையாட்டுத் துறையின் உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு ஒன்றிய அரசு சார்பில் எவ்வளவு நிதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் பாஜக ஆளும் குஜராத் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்கள் முறையே ரூ.606 கோடி மற்றும் ரூ. 500 கோடி நிதியை பெற்றுள்ளனர்.

இதே போன்று இமாச்சல பிரதேசம் மாநிலம் ரூ.193 கோடி நிதியை பெற்றுள்ளது. விளையாட்டுத் துறையின் உள் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில், வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு ஒன்றிய விளையாட்டுத் துறை அமைச்சகம் ரூ.180 கோடி வழங்கி உள்ளது. அதே நேரம் விளையாட்டுத் துறையின் தலைநகரமாக திகழும் தமிழ்நாட்டிற்கு வெறும் ரூ.29.50 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாடு முழுவதும் 322 புதிய விளையாட்டு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கே அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட நிதியானது, வடகிழக்கு மாநிலமான சிக்கிம் பெற்ற நிதியை காட்டிலும் ரூ.33.34 கோடி குறைவாக உள்ளதும் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல், நாட்டில் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களிலிலேயே, தமிழ் நாட்டுக்குதான் மிகவும் குறைவான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *