விசாகப்பட்டினம், ஏப். 30- விசாகப்பட்டினம் நரசிம்ம கோயில் அபிசேகத்தைப் பார்க்க வரிசையில் நின்றவர்கள் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் சிறீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த பலர் அருகில் இருந்த மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் இடிபாடுகளில் இருந்து உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்கி காயமடைந்தவர்களை கேஜிஎச் மருத்துவமனைக்கு மாற்றினர். அதில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. சிம்மாச்சலத்தில் நேற்று (29.4.2025) பெய்த கனமழையால் இந்த விபத்து நடந்தது தெரியவந்துள்ளது.
அமைச்சர் ஆய்வு
நள்ளிரவில் பெய்த பலத்த மழையால் சுவர் விழுந்துள்ளதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
நரசிம்ம கோயில் சந்தன உற்சவத் திருவிழா நடைபெறவிருக்கிறது. குறிப்பிட்ட நாளில் மட்டுமே ஆடை அலங்காரம் எதுவுமில்லாமல் நரசிம்மர் சிலையை காண்பிப்பார்கள் இதைப் பார்க்க பல ஆயிரம் ரூபாய்கள் கட்டிவிட்டு காத்திருப்பார்கள்
கோயில் அதிகாரிகள் நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள், விஅய்பிக்களுக்கு சிறப்பு தரிசன வரிசைகளை ஏற்பாடு செய்கிறார்கள். இந்த நிலையில் கட்டணம் கட்டி நுழைவுச்சீட்டு பெற்றுக்கொண்ட நபர்கள் வரிசையில் காத்திருக்கும் நிலையில்தான் இந்த கோரவிபத்து நிகழ்ந்துள்ளது.