திருவாரூர் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ்.மணியம்- இராசலெட்சுமி மணியம் ஆகியோரது மருமகளும், நினைவில் வாழும் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்விணையரும், திருவாரூர் மாவட்ட கழக துணைத் தலைவர் கி.அருண் காந்தி, அன்புகீதா சுகுமார் ஆகியோரது தாயாருமான கி.அமிர்தகவுரி (வயது 77) 28.4 2025 திங்கட்கிழமை இரவு காலமானதை தொடர்ந்து, இறுதி ஊர்வலம் இன்று (29.04.2025) மாலை 4.00 மணிக்கு திருவாரூர் புலிவலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஏராளமாக கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மறைந்த அம்மையாரின் மகன் கி.அருண்காந்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.