கி.அமிர்தகவுரி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

1 Min Read

திருவாரூர் புலிவலம் சுயமரியாதைச் சுடரொளிகள் எஸ்.எஸ்.மணியம்- இராசலெட்சுமி மணியம் ஆகியோரது மருமகளும், நினைவில் வாழும் எஸ்.எஸ்.எம்.கிருஷ்ணமூர்த்தியின் வாழ்விணையரும், திருவாரூர் மாவட்ட கழக துணைத் தலைவர் கி.அருண் காந்தி, அன்புகீதா சுகுமார் ஆகியோரது தாயாருமான கி.அமிர்தகவுரி (வயது 77) 28.4 2025 திங்கட்கிழமை இரவு காலமானதை தொடர்ந்து, இறுதி ஊர்வலம் இன்று (29.04.2025) மாலை 4.00 மணிக்கு திருவாரூர் புலிவலத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. கழகத் தோழர்கள் ஏராளமாக கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.

குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா அம்மையார், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மறைந்த அம்மையாரின் மகன் கி.அருண்காந்தியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *