புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் சிந்தனை

1 Min Read

சுயமரியாதை இயக்கம்!

உலகத்தில் மதம் வளர்த்தும் சாதி சேர்த்தும்

உயர்வுதாழ் வினைச்செய்தும் சடங்கு கண்டும்

கலகத்தை நடத்துகின்றான்; பழநூற் கொள்கை

கதியென்றான்; உளறுகின்றான்; மூட எண்ணம்

இலகட்டும் என்கின்றான். அந்தத் தீய

இருளப்பன் விடை பெற்றான் திருமுகத்தில்

நிலாவீச ஒளிமங்கை எழுந்தாள்! அந்த

நேரிழை பேர் சுயமரியாதை இயக்கம்!

சுயமரியாதை உலகு!

ஜாதி மதபேதங்கள், மூட வழக்கங்கள்,

தாங்கி நடைபெற்று வரும் சண்டை உலகிதனை

ஊதையினில் துரும்புபோல் அைலக்கழிப்போம்! பின்னர்

ஒழித்திடுவோம்! புதியதோர் உலகம் செய்வோம்!

பேதமிலா அறிவுடைய அவ்வுலகத்திற்குப்

பேசு சுயமரியாதை உலகு எனப் பேர்வைப்போம்!

ஈதே காண்! சமூகமே, யாம் சொன்ன வழியில்,

ஏறுநீ! ஏறுநீ!! ஏறுநீ!! ஏறே!

– புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *