உங்கள் ஜிமெயில் கணக்கை 2 ஆண்டுகளுக்கு மேலாக இயக்காமல் இருக்கிறீர்களா? கணக்கை இழக்க நேரிடும்!

1 Min Read

ஒருவரே பல மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கிக் கொள்ளும் வசதியை கூகுள் நிறுவனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இலவசமாக வழங்குகின்றன. கூகுளின் ஜிமெயில் நிறுவனம் வழங்கும் இச் சேவையைப் பயன்படுத்தி உருவாக் கப்பட்டுள்ள மின்னஞ்சல் கணக்குகள் பல செயல்பாடின்றி இருக்கின்றன. எனவே, அக்கணக்குகளையும், அதன் தரவு களையும் நீக்குவதற்குத் தங்களுக்கு உரிமை உண்டு எனவும், வரும் டிசம்பர் 1, 2023 முதல் கணக்குகளை கூகுள் நீக்கத் தொடங்கும் என்றும் கடந்த மாதம் அறிவித்துள்ளது. 

உங்கள் கணக்கை நீண்ட நாளாகத் திறக்காமல் இருக் கிறீர்களா? உடனடியாக, வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு பயன்பாடுகளுக்காக நீங்கள் உருவாக்கி வைத்துள்ள கூகுள் கணக்குகளைத் திறந்து அவற்றை செயல்பாட்டில் வைத்திருங்கள். அக்கணக்குகள் இனி தேவையில்லை என்று கருதினால், அக் கணக்குகளில் உள்ள தரவுகளை அவற்றிலிருந்து பதிவிறக்கிக் கொள்ளவும் கூகுள் நிறுவனம் வாய்ப்பு வழங்கு கிறது. 

மேலும் விவரங்களுக்கு: <லீttஜீs://sலீஷீக்ஷீtuக்ஷீறீ.ணீt/யீகிஙியி8> என்ற இணைப்பில் உள்ள வழிமுறைகளைப் பின் பற்றலாம்.

– செய்மதி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *