மருத்துவமனை கண்காணிப்பாளர்
கே. ேஹமலதா
பெரியார் மருத்துவமனையில் சிறப்பு வசதிகள் குறித்து மருத்துவமனை கண்காணிப் பாளர் மற்றும் முதன்மை மருத்துவர்
கே. ேஹமலதா கூறியதாவது:
பெரியார் மருத்துவமனையில் அனைத்து வியாதிகளுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினமும் 2700 முதல் 3 ஆயிரம் நோயாளிகள் வருகின்றனர். குறிப்பாக நெஞ்சு வலியுடன் வரும் நோயாளிகளுக்கு ECG, ECHOSCAN எடுக்கப்படுகிறது. மேலும் ஆஞ்சியோகிராம் செய்யப்படுகிறது. ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரிய வந்தால் Stent பொருத்தப்படுகிறது.
டயாலிசிஸ் : மருத்துவமனைக்கு சிறுநீரக நோயாளிகள் அதிக எண் ணிக்கையில் வருகிறார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சையளித்து மருந்துகள் வழங்கப்படுகின்றன. டயாலிசிஸ் பிரிவு 3 ஷிப்டாக இயங்குகிறது. 120 பேருக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது
சிறுநீரக கற்களைப் பொருத்து அறுவை சிகிச்சை இல்லாமல் அதிர்வலைகள்மூலம் சரி செய்யப்படுகின்றன. எண்டோஸ்கோபி சிகிச்சையால், அறுவை சிகிச்சையினால் ஏற்படும் காயவடு இல்லாமல் சிறுநீரக கற்கள் நீக்கப்படும். பிராஸ்டேட் வீக்கம் மற்றும் புற்று நோய் தொடர்பான அனைத்து வகை அறுவை சிகிச்சைகளும் செய்வதற்கு வசதி உள்ளது.
புற்றுநோய் மருத்துவம்: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு புற்றுநோயை கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது. புற்றுநோய் என உறுதிபடுத்தப்பட்டால் அதற்கான மருந்துகள் வழங்கப்படுகிறது. அறுவை சிகிச்சைக்கு முன்பும், பின்பும் Chemotherapy செய்யப்படுகிறது. தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் அளிக்கிறோம்.
பதிவேடு அட்டை: புற நோயாளிகளுக்கு பதிவேடு அட்டை வழங்கப் படுகிறது. உள்நோயாளிகளுக்கு அடையாள கைப்பட்டையும், உடன் இருப்பவர் களுக்கு அட்டையும் வழங்கப்படுகிறது. நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சைப் பெற போதுமான அளவு சாதாரண வார்டுகளும், கட்டண வார்டுகளும் உள்ளன. முழு உடல் பரிசோதனையும் செய்யப்படுகிறது.
கொளத்தூர் பெரியார் மருத்துவமனை அமைவிடம்
கொளத்தூர் பெரியார் மருத்துவமனை சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவிலும், பெரம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீட்டர் தொலைவிலும் சென்னை கொளத்தூர் தொகுதியில் பெரியார் நகர் கார்த்திகேயன் சாலையில் அமைந்துள்ளது.
முதலமைச்சர் காப்பீடு திட்டம்: மருத்துவமனையில் முதலமைச்சரின் காப்பீடு திட்டம் திறம்பட செயல்பட்டு வருகிறது. நோயாளிகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் மருத்துவமனையிலேயே வழங்கப்படுகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இருதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டோருக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகள் வழங்கப்படுகின்றன.
கர்ப்பப்பை நோய்: இம்மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சுகப் பிரசவம் ஆகாத சூழ்நிலையில் அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. மேலும் கர்ப்பப்பை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் மருத்துவமும், அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் உள்பட அனைத்து குழந்தைகளுக்கும் சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பச்சிளங் குழந்தை சிறப்பு கவனிப்பு மய்யம் மற்றும் குழந்தைகள் சிறப்பு கவனிப்பு மய்யம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது.
நாய்க்கடி மருந்து: மருத்துவமனையில் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டவர் களுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருந்துகள் உள்ளன. அவர்களை தங்க வைத்து ஊசி போட்டு 24 மணி நேரம் கண்காணிப்போம். தொடர்ந்து 5 ஊசிகள் போடப்படும்.
நோயாளிகள் மருத்துவமனையில் வார்டில் தங்கி இருந்து சிகிச்சைப் பெறும் சூழலில் அவர்களை கவனிப்பதற்காக அவர்கள் வார்டில் ஒரு உறவினர் தங்க முடியும். மேலும் காத்திருப்பு அறையில் உறவினர்கள் தங்கலாம். 24 மணி ேநரமும் மருத்துவமனை செயல்படுகிறது. அனைத்து துறை மருத்துவர்களும் பணிக்கு வருகை புரிகின்றனர். பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உள்ளது. இந்த நோய்க்கு இந்த கிழமைதான் மருத்துவம் செய்யப்படும் என விதிமுறை எதுவும் இல்லை. அனைத்து துறைமருத்துவ துறையும் தினமும் செயல்படுகிறது.
லேசர் மூலம் கற்கள் அகற்றும் சிகிச்சை: பெரியார் மருத்துவமனையில் லேசர் மூலம் சிறுநீரக கற்களை அகற்றும் சிகிச்சை மிகச் சிறப்பாக செயல்படுகிறது. போதை மறுவாழ்வு மய்யம் புதிதாக திறக்கப்பட்டு சிறந்த முறையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. போதை பழக்கத்துக்கு ஆளானவர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெற 10 படுக்கை வசதிகள் உள்ளன. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறது. மாதம் 60 கண் நோயாளிகளுக்கு கண்புரை அறுவை சிகிச்சையளிக்கப்படுகிறது.
கேண்டின் வசதி: மருத்துவமனையில் கேண்டின் வசதி, ஆவின் பால் நிலையம், உள்ளிருப்பு காவல் நிலையம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல சிறப்பம்சங்கள் உள்ளன. கொளத்தூர் மட்டுமின்றி அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
கடந்த வாரம் மாதவரத்தைச் சேர்ந்த ஒரு ெபண் தவறி விழுந்ததில் முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் உரிய அறுவைச் சிகிச்சையளித்தனர். ஆச்சரியப்படும் விதத்தில் அந்த பெண் மறுநாளே நடந்து காட்டினார். தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றால் அதிக பொருட் செலவு ஆகலாம். இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் மருத்துவமனைக்கு நிகராக மருத்துவ சேவையாற்றி வரும் பெரியார் மருத்துவமனை கொளத்தூர் மக்களுக்கு கிடைத்த நல்வாய்ப்பு. இம்மருத்துவமனை விரைவில் மருத்துவ கல்லூரியாக, பல்கலைக் கழகமாக ஜொலிக்கும் என்பதில் அய்யம் இல்லை.