அமைச்சரை நீக்குவதாக ஆளுநர் அறிவித்தது தவறு சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு

1 Min Read

சென்னை, ஜூலை 1-  செந்தில் பாலாஜியை அமைச்சரவை பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்தது தவறு என்றும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு அதிகாரமில்லை எனவும் சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு தெரி வித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அப்பாவு, அமைச்சரை பதவி நீக்கம் செய்வதற்கு இந்திய அரசமைப்பு சட்டத்தில் ஆளுநருக்கு இடமில்லை. அதனைத் தெரிந்துகொண்டு ஆளுநர் தனது உத்தரவை திரும்பப் பெற்றுள்ளார். குற்ற வழக்குகளில் சிக்கிய பல பாஜக அமைச்சர்கள் நீதிமன்ற படிகளுக்கு அதிகாரத்துடன்தான் சென்று வந்தனர். 

பெரும்பான்மைப் பெற்ற ஒருவரை முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொள்ள கூறும் உரிமையைத் தவிர ஆளுநருக்கு வேறு அதிகாரமில்லை.

ஆளுநரை பலமுறை சந்தித்துப் பேசியுள் ளேன். அவர் பண்பானவர். ஆனால் உணர்ச் சிவசப்படக்கூடியவர். சீக்கிரம் உணர்ச்சிவசப் பட்டு ஆளுநர் இத்தகைய அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழகம் என்பார் – பின்னர் தமிழ்நாடு என மாற்றி மீண்டும் அறிக்கை விடுவார்.  மதச்சார்பற்ற நாடு இந்தியா. இந்திய அரசமைப்பு சட்டப்படி அமைச்சரை அதிகாரத்திலிருந்து நீக்க ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை எனக் குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *