டில்லியில் சிபிஎஸ்சி ஆள்சேர்ப்பு தேர்வில் ஆள் மாறாட்ட மோசடி

1 Min Read

புதுடில்லி, ஏப்.27- சி.பி.எஸ்.இ. நிறுவனத்தில் கண்காணிப்பாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது.

டில்லியில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதச் சென்ற ஒருவர் மீது அந்த பள்ளியின் ஆசிரியருக்கு சந்தேகம் வந்தது. பயோ மெட்ரிக் பதிவில் அந்த நபரின் பதிவுகள் பொருந்தவில்லை. இது குறித்து அந்த ஆசிரியர், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள், தேர்வு எழுத வந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரது பெயர் சச்சின். அவர் நிதின் என்பவருக்கு பதிலாக தேர்வு எழுத வந்தது கண்டறியப்பட்டது. இருவரும் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். ஆள் மாறாட்டம் தொடர்பாக கைமாறிய தொகை கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த ஆள் மாறாட்ட மோசடியில் மேலும் யார், யாரெல்லாம் இருக்கிறார்கள்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *