இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது

viduthalai
1 Min Read

நியூயார்க், ஏப்.27  இந்தியாவில் இளைஞர்களின் வேலையின்மை 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பிலான அறிக் கையை உலக வங்கி வெளி யிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கப்படு பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வரு வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:

நாளொன்றுக்கு ரூ.200-க்கும் குறைவாக சம்பாதித்து வாழ்பவர்கள் கடும் வறுமையில் இருப்பவர்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2011-2012 ஆண்டுகளில் இந்தியாவில் 16.2-ஆக இருந்த கடும் வறுமையில் உள்ளோர் விகிதம் 2022-2023-இல் 2.3 சதவீதமாக குறைந்துள்ளது. சுமார் 17.1 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

கிராமப்புறங்களில் இதே காலக் கட்டத்தில் 18.4 சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில்  10.7  சதவீதத்திலிருந்து 1.1 சதவீ தமாகவும் குறைந்துள்ளது.

குறைந்த – நடுத்தர வருமானம்: கிராமப்புறங்களில் இதே காலக் கட்டத்தில் 18.4சதவீதத்திலிருந்து 2.8 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 10.7 சதவீதத்திலிருந்து 1.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

குறைந்த – நடுத்தர வருமானம்: குறைந்த – நடுத்தர வருமானப்பிரிவு உள்ளவர்களின் நாடாக இந்தியா மேம்பட்டுள்ளது. இதன்படி நாளொன் றுக்கு ரூ.300-க்கும் மேல் வருமானம் பெறுபவர்களாக இந்தியர்கள் உள்ளனர். இதன் அடிப்படையில் 37.8 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள் ளனர்.

இதன்படி, கிராமப்புறங்களில் 69 சதவீதத்திலிருந்து 32.5 சதவீத மாகவும், நகர்ப்புறங்களில் 43.5 சதவீதத்திலிருந்து 17.2 சதவீதமாகவும் வறுமை குறைந்துள்ளது. கடந்த 2011-2012 ஆண்டுகளில் இந்தியாவின் கடும் வறுமை பிரிவினரில் 65 சதவீதத்தினர், அதிக மக்கள் தொகை கொண்ட உத்தர பிரதேசம், மகாராட்டிரம், பிகார், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்தான் இருந்தனர். 2022-2023-இல் இது 54 சதவீதமாக குறைந்தது.

இளைஞர்களின் வேலையின்மை 13.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், கிராமப்புற பெண்களிடம் சுயவேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *