நாடு தழுவிய போராட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு!

1 Min Read

புதுடில்லி, ஏப். 26 நாடு முழுவதும் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை அரசியலமைப்புக்காக போராட்டங்களை மேற்கொள்ளவிருப் பதாக காங்கிரஸ் கட்சி அறிவித் துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுடன் பேசுகையில், “அரசமைப்பைக் காப்பாற்றும் போராட்டம் ஏப்ரல் 25 முதல் ஏப்ரல் 30 வரையில் பிரதேச காங்கிரஸ் கமிட்டி அளவிலும், மே 3 முதல் மே 10 வரையில் மாவட்ட அளவிலும், மே 11 முதல் மே 17 வரையில் நாடு முழுவதும் 4,500 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். தொடர்ந்து, மே 20 முதல் மே 30 வரையில் வீட்டுக்குவீடு பிரசாரமும் நடத்தப்படும்.

காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகத்தை ஒன்றிய பாஜக அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. இது, அரசியல் பழிவாங்கும் வழக்கே. மேலும், இது ஒரு சட்டரீதியிலான பிரச்சினை அல்ல; இது, ஓர் அரசியல் துன்புறுத்தல், அச்சத்தைத் தூண்டும் அரசியல் பிரச்சினை. என்றார் அவர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *