ஊடக பதிவுகளில் கவனம் வேண்டும் பரிசு பொருட்களை வாங்கக்கூடாது

1 Min Read

அய்ஏஎஸ், அய்பிஎஸ் அதிகாரிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வெளியீடு

புதுடில்லி, ஏப்.26 2024ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் 1,009 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அய்ஏஎஸ், அய்பிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முசோரியில் உள்ள லால் பகதுார் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் சிவில் சர்வீசஸ் அதிகாரிகளுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை லால் பகதுார் சாஸ்திரி அகாடமி வெளியிட்டுள்ளது. அதில், சிவில் சர்வீஸ் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் சமூக ஊடகப் பதிவுகள் தங்கள் சேவையைப் பிரதிபலிக்கின்றன என்பதை நினைவில் வைத்து கவனமாக இருக்க வேண்டும்.

பரிசுகள்,விருந்தோம்பல் மற்றும் இலவச விளம்பரம் போன்ற அனைத்து வகையான தூண்டுதல்களையும் அவர்கள் நிராகரிக்க வேண்டும். பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், பெரு நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினருடனான உங்கள் தனிப்பட்ட நடத்தை மற்றும் உத்தியோகபூர்வ மற்றும் சமூகத் தொடர்பு மரியாதைக்குரியதாகவும்,  கண்ணியமானதாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *