தெலங்கானா மாநிலம் வாரங்கலில் 14 மாவோயிஸ்டுகள் காவல்துறையில் சரணடைந்தனர்

1 Min Read

 

வாரங்கல், ஏப். 26 தெலங் கானா மாநிலம் வாரங்கலில் அய்ஜி சந்திரசேகர் ரெட்டி முன்னிலையில் 14 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். இதுகுறித்து அய்.ஜி.சந்திரசேகர் கூறுகையில், ‘சரணடைந்த ஒவ்வொரு மாவோ யிஸ்டுக்கும் உடனடி நிவா ரணமாக ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

இரண்டு மாதங்களாக மாவோயிஸ்டுகள் சரணடைவதை காவல்துறையினர் ஊக்குவித்து வருகிறோம். இந்த ஆண்டு 250 பேர் சரணடைந்தனர். இன்று (25.4.2025) 14 பேர் சரணடைந்தனர்.அவர்களில் இருவர் பகுதி குழு உறுப்பினர்கள். மாவோயிஸ்டுகள் தங்கள் வன்முறைக் கொள்கைகளை கைவிடச் செய்வதே எங்கள் நோக்கம்.

எந்த மாநிலத்திலிருந்தும் வந்து எங்களிடம் சரணடையலாம் மாவோயிஸ்டுகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். மக்களின் வாழ்வாதாரத்தில் அவர்கள் ஒருங்கிணைந்தால் வேலை வாய்ப்புகளை வழங்கப்படும்’ என்று கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *