நாகர்கோவிலில் உலக புத்தக நாள் விழா

1 Min Read

கன்னியாகுமரி, ஏப்.25 கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக  உலக  புத்தக நாள் விழா நிகழ்ச்சி நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில்  நடைபெற்றது.

கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரையாற்றினார். திமுக இராசாக்கமங்கலம் ஒன்றிய செய லாளர் ஆ. லிவிங்ஸ்டன் தந்தை பெரியாருடைய நூல்களைப் பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.

பகுத்தறிவாளர்கழக  மாவட்டத் தலைவர் உ. சிவதாணு, திமுக பொறி யாளர் அணி தலைவர் முனைவர் இராஜேஷ் இரத்தினமணி, கழகத் தோழர்கள் எ.ச. காந்தி,   அஃப்ரின் சில்வான்ஸ் ஆகியோர்  உரையாற்றினார்கள்.  பெரியார் பெருந்தொண்டர் ஞா.பிரான்சிஸ்,  மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் த.பிராங்ளின், திருவரம்பு விஜய் உள்ளிட்ட

பெரியார் பற்றாளர்கள் பலரும்  கலந்துகொண்டு உலக புத்தகநாளில் திராவிடர் இயக்க நூல்களை ஆர்வமாக வாங்கினர். மாவட்ட பகுத்தறிவாளர்கழக செயலாளர் எம்.பெரியார் தாஸ் நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *