அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (23.4.2025) விருந்து அளித்தார். பாஜகவுடன் கூட்டணி யமைத்திருப்பதால், அ.தி.மு.க. தலைமைமீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும், மேனாள் அமைச்சர் செங்கோட்டையன் இந்த விருந்துக்கு வரவில்லை. இது, இபிஎஸ் – செங்கோட்டையன் இடையேயான பிரச்சினையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.