பயர்நத்தம், ஏப். 23- அரூர் கழக மாவட்டம் பயர்நத்தம் கிராமத்தில் 20.4.025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றிய கழகம் சார்பில் ஒன்றிய கழக செயலாளர் பொன்.அய்யனார் தலைமையில் அண்ணல் அம்பேத்கர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு பயர்நத்தம் பேருந்து நிலையத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட கழக தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை, ஒன்றிய இளைஞரணி செயலாளர் ராஜேஷ், திமுக நிர்வாகி இரா. சேட்டு, ஆகியோர் முன்னிலை ஏற்றனர். கழக சொற்பொழிவாளர் மழவை சு. பெ.தமிழமுதன், மாநில கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் மாணவர் கழக தோழர்கள் அரிகரன், அ.பிரதாப், சஞ்சீவன், தருமபுரி கண் ராமச்சந்திரன், திமுக நரேஷ் வர்மா, மணிகண்டன், சின்னசாமி, பொன்னுசாமி, புனிதா, பெரியார் துவாரகா, ஆகியோர் கலந்து கொண்டனர் கழகத் தோழர் சிலம்பரசன் நன்றி கூறினார்.