வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் ரூ.2 ஆயிரமாக உயர்வு அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஏப்.22- தமிழ்நாடு சட்டசபையில் கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ் (திருச்சி கிழக்கு), தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதனிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்று அரசு உத்தர விட்டுள்ளது. எனவே தமிழில் பெயர் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வணிக வளாகங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாமல் இருந்தால் நடவடிக்கைகள் எடுப்பது தொழிலாளர் நலத்துறைதான். அதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டு வருகிறது. அதற்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகை தற்போது ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழில் பெயர் பலகை வைக்க விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு, படிப்படி யாக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள் ளப்படும் என்று குறிப்பிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *