கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 20.4.2025

Viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

  • வக்ஃபு சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம், மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு.

 

தி இந்து:

  • நீதித்துறையும் பத்திரிகையும் ஜனநாயகத்தின் இரண்டு தூண்கள்: ‘பத்திரிகை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் விதம் வேறுபட்டது, ஆனால் தாக்குதல் தொடர்கிறது,’ என்று மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் லோக்கூர் கவலை.
  • ஹிந்தி திணிப்பால் ஒன்று சேரும் பிரிந்த கட்சிகள்! மும்மொழிக் கொள்கையின் அடிப்படையில், மராத்தி மற்றும் ஆங்கில வழி பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஹிந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்ற மகாராட்டிரா பாஜக தலைமையிலான அரசு எடுத்த முடிவு உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரே சேரும் வாய்ப்பை மகாராட்டிராவில் ஏற்படுத்தி உள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை கட்டிப்பிடிப்பது, அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இந்தியாவுக்கு உதவாது என ராகுல் காந்தி விமர்சனம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

  •  குடியரசுத் தலைவருக்கு உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டம் அதிகாரம் அளித்துள்ளது: ‘அரசமைப்பின் 75ஆவது ஆண்டு’ என்ற தலைப்பில் ராகேஷ் அறக்கட்டளை நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி செல்லமேஸ்வர் பேச்சு.
  • டில்லிக்கு தமிழ்நாடு என்றென்றும் ‘கட்டுப்பாட்டை மீறி’ இருக்கும்; தமிழர்கள் ஆதிக்கத்தை ஒருபோதும் அனுமதிக்காத, தனித்துவமான தன்மை மற்றும் சுயமரியாதை கொண்டவர்கள், டில்லியில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஒரு போதும் தலைவணங்க மாட்டார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *