பிஜேபி. ஆளும் உத்தரப்பிரதேசத்தில் சட்ட விரோதமான மருத்துவமனைகள் எதிர்ப்பால் இழுத்து மூடப்பட்டன

viduthalai
1 Min Read

காசியாபாத், ஏப்.19 உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் தகுதி யில்லாத நபர்களால் நடத்தப்பட்டுவந்த 70 சட்டவிரோத மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மய்யங்கள் மூடப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்து அதிகாரி தருண் குமார் பாடக் கூறியதாவது:

தொடா்ச்சியாக பெறப்பட்ட புகார் களின்  அடிப்படையில் மாவட்டத்தில் சட்ட விரோதமாக இயங்கி வரும் மருத் துவமனைகள், சிகிச்சை மய்யங்கள் மற்றும் ஆய்வகங்கள் குறித்த சிறப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கென, மாவட்டத்தின் மூன்று பகுதி களுக்கு தனித்தனி ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆய்வில், முறையாக பதிவு செய்யாமல் இயங்கி வந்த 70 மருத்துவமனைகள், சிகிச்சை மய்யங்கள் அடையாளம் காணப்பட்டு, மூடப்பட்டன. அவற்றை இயக்கி வந்த தகுதியற்ற மருத்துவர்கள் உள்பட 50 பேர்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தொடரும் என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *