தமிழ்நாட்டில் இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு

1 Min Read

சென்னை,நவ.14- தமிழ்நாட்டில் பாலிடெக்னிக் கல்லூரி களில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு வைக்கப்பட்டுள்ளன.

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று (14.11.2023) நடைபெறவிருந்த  பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, மறுதேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மறு தேர்வு குறித்த முழு விவரங்களை  https://dte.tn.gov.in   என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கனமழை

கட்டணமில்லா எண் அறிவிப்பு

சென்னை,நவ.14- சென்னையில் கனமழையால் ஏற்படும் குறைகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவிக்க கட்டணமில்லா எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

1913 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார்களைத் தெரிவிக்கலாம் என்று சென்னை மக்களுக்கு மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், 9445477205 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் மூலமும்  தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

044-25619206, 25619207, 25619208 ஆகிய எண்களில் அழைத்து மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *