ஓட்டு வாங்க மட்டுமே சலுகைகள் அறிவிப்பு!

Viduthalai
1 Min Read

ஆட்சியைப் பிடித்த பிறகு ‘நாமம்’ போட்ட மகாராட்டிரா மற்றும் டில்லி பாஜக அரசுகள்!

புதுடில்லி, ஏப்.19 மக்களிடம் தேர்த லின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அவற்றை மகாராட்டிரா, டில்லி பா.ஜ.க. அரசுகள் கைகழுவியுள்ளன.
தமிழ்நாட்டைப்பார்த்து காப்பி யடித்து மகராட்டிரா தேர்தலுக்கு முன்பாக ஆகஸ்ட் மாதம் மராட்டிய மாநிலப் பெண்களுக்கு ரூ.2,300 வழங்கினார்கள். செப்டம்பர், அக்டோபர் மாதம் சென்றது, நவம்பரில் தேர்தலை காரணம் காட்டி நிறுத்திவிட்டார்கள்
அதோடு சரி, இன்றுவரை பெண்க ளுக்குப் பணம் போய்ச் சேரவில்லை. இப்போது தகுதியான பெண்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பணத்தைத் திருப்பித்தரவேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

டில்லியில் ஆம் ஆத்மி அரசு இருந்த போது, பெண்களுக்கு கட்ட ணமில்லா பேருந்து பயணத்தை அறி வித்தது.
டில்லியில் 90 விழுக்காடு பெண்கள் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இந்த நிலையில் டில்லியில் ஆட்சியைப் பிடித்த பாஜக அரசு, டில்லி பெண்களுக்கு மட்டுமே கட்டணமில்லா பேருந்து பயணம் என்று அறிவித்துவிட்டது.
அதாவது தேர்தலுக்கு மட்டுமே – வாக்கு வாங்குவதற்காக பெண்களை ஏமாற்றிய மராட்டிய மற்றும் டில்லி பாஜக கட்சி, வாக்கு வாங்கி ஆட்சியைப் பிடித்த பிறகு தற்போது சலுகைகளை நிறுத்திவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *