ஓ, அவனா இவன்?

1 Min Read

தமிழ்ப் புத்தாண்டாம். ஆண்டு என்றுகூட சொல்லக் கூடாது!

ஆமாம்; வருஷம் என்றுதான் சொல்லவேண்டும் – அப்படித்தானே!

விசுவாவசு என்றால் யார்?

கந்தர்வன்!

ஓ, பார்ப்பனர்கள் கல்யாண வீட்டில் ஒரு மந்திரம் சொல்லுவார்களே!

மணமகளைப் பார்த்து சோமன் என்பவன் இந்தப் பெண்ணுக்குக் கணவனாக இருந்தான் –  பிறகு கந்தர்வன் இந்தப் பெண்ணின் புருஷன்; பெண்ணின் மூன்றாவது கணவன் அக்னி; நான்காவது கணவன் மனித ஜாதியில் பிறந்தவன் என்பதுதான்.

கல்யாணத்தில் பார்ப்பனர்கள் சொல்லும் அந்த சுலோகம் இதுதான்.

“ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர:

த்ரூதீயோ அக்நிஷ்டேபதி:

துரீயஸ்தே மநுஷ்யஜா:’’

கந்தர்வன் என்பவன் தேவர்களுக்கு சோமரசம் எனும் மதுபானம் தயாரித்துக் கொடுப்பவன்.

எப்படியாப்பட்ட பெயர் தமிழ் வருஷத்துக்குக் கிடைத்துள்ளது பார்த்தீர்களா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *