மேற்குவங்க வன்முறைகளுக்குப் பின்னால் பாஜக, ஹிந்துத்துவ சக்திகளா?

1 Min Read

கொல்கத்தா, ஏப்.18 மேற்குவங்கம் மொர்ஷி தாபாத்தில் வக்ஃபு சட்ட திருத்தத்திற்கு எதிரான அமைதிப்பேரணி நடந்த போது வன்முறை வெடித்தது, தொடர்ந்து கலவரம் நடந்துகொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் மொர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சிலர் கலவரம் செய்து விட்டு ஓடிய இரண்டு நபர்களைப் பிடித்து விசாரித்த போது அவர்கள் ஹிந்துக்கள் என்றும், பீகாரில் இருந்து பணம் கொடுத்து அனுப்பப்பட்டவர்கள் என்றும் கூறியுள்ளனர்.

இருவரையும் ஊர் மக்கள் காவல்துறை யினரிடம் பிடித்துக் கொடுத்த பிறகு மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வரலாம்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, ‘‘அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து வந்து வன்முறையில் ஈடுபடுகிறார்கள். ஆகவே வதந்திகளுக்கு இடம் கொடுக்காமல் அமைதி காக்கவேண்டும்’’ என்று கூறிய நிலையில் இரண்டு ஹிந்து பீகாரிகள் பிடிபட்டது மம்தாவின் கூற்று உண்மையாய் மாறிவிட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *