புதுடில்லி, ஏப்.17 கடந்த மாா்ச் மாத காலாண்டின் இறுதியில் இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 4 சதவீதம் குறைந்துள்ளது.
இது குறித்து துறை ஆலோசனை நிறுவனமான அனராக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
டில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி (எம்எம்ஆா்), கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அய்தராபாத், புனே ஆகிய நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில் விற்பனையாக வீடுகளின் எண்ணிக்கை கடந்த மாா்ச் காலாண்டு இறுதியில் 5,59,808-ஆக இருந்தது.
இது முந்தைய 2023-2024-ஆம் நிதியாண் டின் அதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதம் குறைவு. அப்போது இந்த எண்ணிக்கை 5,80,895-ஆக இருந்தது.
மதிப்பீட்டு காலாண்டில் ரூ.40 லட்சத்திற்கும் குறைவான விலை கொண்ட விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை இந்த நகரங்களில் 19 சதவீதம் குறைந்து 1,12,744-ஆக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இந்த எண்ணிக்கை 1,39,905-ஆக இருந்தது.
ரூ.40 லட்சம் முதல் 80 லட்சம் விலை கொண்ட விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை மதிப்பீட்டுக் காலாண்டில் 1,57,741-ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை ஓராண்டுக்கு முன்னா் 1,74,572-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த விலைப் பிரிவில் விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை தற்போது 10 சதவீதம் குறைந்துள்ளது.
எனினும், நாட்டின் முக்கிய ஏழு நகங்களில் கடந்த 2023-2024-ஆம் நிதியாண் டின் மாா்ச் காலாண்டு இறுதியில் 1,75,293-ஆக இருந்த ரூ.80 லட்சம் முதல் ரூ.1.5 கோடி வரையிலான விலை கொண்ட விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை 2024-2025-ஆம் நிதியாண்டின் அதே காலகட்டத்தில் 1,76,130-ஆக அதிகரித்துள்ளது.