உத்தரப்பிரதேச பிஜேபி ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு அவல நிலை உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்தவர் சுட்டுக்கொலை

viduthalai
1 Min Read

அலிகார், ஏப்.16 உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந் தவர் 4 பேர் கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி களை கைது செய்யக்கோரி காவல்நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சரமாரி துப்பாக்கி சூடு

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் அருகே பன்னாதேவி காவல் நிலையத்துக்கு உட் பட்ட நாக்லாகரார் கிரா மத்தை சேர்ந்தவர் முராரி லால் வால்மீகி (வயது 40).  இவர் அதே கிராமத்தை சேர்ந்த தனது நெருங்கிய உறவினரின் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் குடும்பத்துடன் சென்று இருந் தார். அப்போது இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கும்பல், தங்களிடம் இருந்த துப்பாக் கிளால் அந்த வீட்டை நோக்கி சரமாரி யாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர்.  அப்போது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்த முராரி லால் வால்மீகி மீதுதுப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முராரிலால் வால்மீகியின் உடலை கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக முராரிலால் வால்மீகியின் மனைவி கொடுத்த புகாரில் ஹிமான்ஷுலோதி உள்ளிட்ட சிலர்தான் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறியிருந்தார்.

காவல் நிலையம் முற்றுகை

இந்த சம்பவத்தில் தொடர் புடையவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி, பன்னா தேவி காவல் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

முராரி கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க தனி காவல் படை அமைக்கப்பட்டுள்ளதாக வும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தாலுகா காவல் அதிகாரி ராஜீவ் திவேதி கூறினார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *