கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.4.2025

viduthalai
1 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிடில் அபராதம் விதிக்கப்படும், தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

* மாநில உரிமைகளை பாதுகாக்க நீதிபதி ஜோசப் குரியன் தலைமையில் உயர்மட்ட குழு: சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து காங்கிரஸ் கட்சி தலைமையுடன் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி பேச்சுவார்த்தை.

* ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பு அமைத்தல், கருத்து சுதந்திரம் குறித்து தடை விதிக்கும் டிரம்ப் அரசின் நடவடிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் எதிர்ப்பு; 2.2 பில்லியன் டாலர் நிதியை நிறுத்தி டிரம்ப் உத்தரவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உருது வேற்று மொழி அல்ல, இந்த மண்ணில் பிறந்த மொழி என  உச்சநீதிமன்றம் தீர்ப்பு; மகாராட்டிராவின் அகோலா மாவட்டத்தில் உள்ள படூர் நகராட்சி கட்டடத்தின் அடையாளப் பலகையில் உருது மொழியை பயன்படுத்துவதை எதிர்த்து மேனாள் கவுன்சிலர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

தி இந்து:

* மத்திய-மாநில உறவுகளுக்கு “கிளாஸ்னோஸ்ட்” (வெளிப்படைத்தன்மை) தேவையா, தேவைப்பட்டால், “பெரெஸ்ட்ரோயிகா” (மறுசீரமைப்பு/சீர்திருத்தம்) தேவையா என்பதை குழு ஆராயும் என தமிழ்நாடு அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவை வழிநடத்தும் மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் பேட்டி.

*அய்.அய்.டி., என்அய்டி வேலைவாய்ப்பு தரவுகள் வேலை சந்தை தேக்கத்தைக் காட்டுகின்றன என கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் சமீபத்திய அறிக்கையை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் குற்றச்சாட்டு.

– குடந்தை கருணா

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *