நடுத்தர வயது பெண்களுக்கு மித ஓட்டப் பயிற்சி கட்டாயம்

Viduthalai
2 Min Read

அரசியல்

பெண்கள் ‘ஜாக்கிங்’ எனப்படும் மித ஓட்டப்பயிற்சி மேற்கொண்டால், அவர்களிடமிருந்து நோய்களும் ஓடி விடும். ஆண்களைவிட பெண்களின் உடலில்தான் கொழுப்பு அதிகம் சேருகிறது. அதனால் 35 வயதை தாண் டிய பெண்கள் கட்டாயம் ‘ஜாக்கிங்’ மேற்கொள்ளவேண்டும். அப்போது தேவையில்லாத கொழுப்புகள் கரை யும். ரத்த ஓட்டமும் சீராகும். உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும். ரத்தத் தில் சர்க்கரை அளவு சீராகும். எலும் பின் அடர்த்தி அதிகமாவதுடன், தசை களும் வலுவடையும். ஓடும்போது கவ னிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. முறையாக ஓடுவது மிக முக்கியம். இல்லாவிட்டால் அது நல் லது செய்வதற்கு பதில் கெடுதலாகி விடும்.

முறையாக ஓட்டப் பயிற்சியை மேற்கொள்ளாவிட்டால் ‘ரன்னர் நீ’ என்ற மூட்டு பிரச்சினை ஏற்படும். எடுத்த எடுப்பிலே கடுமையான ஓட் டப்பயிற்சிகளில் ஈடுபட்டால் குறுத் தெலும்பு தேய்ந்து, வலி உருவாகும். மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதோ, இருக்கையில் அமர்ந்துவிட்டு எழும் போதோ மூட்டுகளில் வலிக்க ஆரம் பிப்பது இதன் அறிகுறியாகும்.

ஓட்டப் பயிற்சி பெறும் பெண்கள் எவ்வளவு தூரம் ஓடுகிறோம் என்பதை விட, எந்த விதத்தில் ஓடுகிறோம் என்பதில்தான் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். அதனால் முறை யான ஆலோசனையை பெற்றுவிட்டு அவர்கள் பயிற்சியினை தொடருவது நல்லது. ஓட்டப் பயிற்சியில் ஈடுபடுவ தற்கு முன்பு பெண்கள் தங்கள் உடல் நலத்தை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

பெண்கள் தங்கள் உடல்நிலைக்கு தக்கபடியான உடற்பயிற்சிகளையே அவர்கள் செய்யவேண்டும். இதய நோய் இருப்பவர்கள், சர்க்கரை நோயா ளிகள் மருத்துவரின் ஆலோசனைக்கு பின்பே ஓட்டப் பயிற்சியை மேற் கொள்ளவேண்டும்.

ஓட்டப்பயிற்சியில் ஈடுபடும் பெண் கள் இறுக்கமான ஆடைகளை அணியக் கூடாது. அதுபோல் பருத்தி ஆடையை அணிவதும் ஏற்றதல்ல. இவை இரண்டும் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும் தன்மை கொண்டவை. செயற்கை இழை ஆடைகளை அணிந்து ஓடும்போது வியர்வை உடலின் மேற்பரப் பில் தங்கும். அதனால் உடல் குளிர்ச்சி யாகும். வெப்பமடைவது தவிர்க்கப் படும். கால்களுக்கு பொருத்தமான காலணி களை அணிந்துகொண்டு பயிற்சியினை மேற்கொள்வது மிக அவசியமானது. கால ணிகள் எடை குறைந்ததாகவும் இருக்க வேண்டும்.

புதிதாக ஓட்டப் பயிற்சியில் ஈடுபடு கிறவர்கள் சிறிது நேரம் நடக்க வேண்டும். பின்பு சில நிமிடங்கள் ஓட வேண்டும். இவ்வாறு மாற்றி மாற்றி செய்தால் இதயத்திற்கு அழுத்தம் ஏற் படாது. பயிற்சி உடலுக்கு இதமாக இருக்கும். போக்குவரத்திற்குரிய சாலை களில் ஓடுபவர்கள் ஒளிரும் தன்மை கொண்ட ஆடைகளை அணிவது அவசியம்.இப்போது நிறைய பேர் நடைப் பயிற்சி மேற்கொள்கிறார்கள்.

ஆனால் அவர்களில் பெரும் பாலானவர்கள் தங்களுக்கு தோன்றிய படி எல்லாம் நடக்கிறார்கள். நடைப் பயிற்சியையும் சரியான முறையில் மேற்கொள்ளவேண்டும். தலையை குனிந்தபடி சாய்ந்த நிலையில் நடந்தால் கழுத்துவலி, முதுகுவலி, தோள்பட்டை வலி போன்றவை ஏற்படலாம். நடக்கும் போது கைகள் நன்றாக அசைய வேண்டும். கைகளை வீசாமல் பொம் மைபோல் நடந்தால் அது முதுகெலும் புக்கு அழுத்தத்தைக் கொடுத்து வலியை ஏற்படுத்தும். சமதளத்தில் நடக்கவேண்டும். ஒரே இடத்தில் நடக் காமல் இடத்தை மாற்றிக்கொள்வது புதிய சூழலை ஏற்படுத்தும். அது நடப்பதற்கான ஆர்வத்தை அதிக ரிக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *