சென்னை, ஏப்.15 ஜூன் மாதம் நடைபெறும் ஹஜ் புனித பயணத்தில் இந்தியா சார்பில் 1.75 லட்சம் பேர் பங்கேற்க சவுதி அரசு அனுமதித்துள்ளது. அனுமதிக்கப்பட்டுள்ள 1.775 லட்சம் பேரில் 52,200 பேர் ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பின் மூலம் செல்லஉள்ளனர். ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் மூலம் செல்லும் பயணிகளுக்காக மெக்கா அருகே உள்ள மினாவில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
மினாவில் 5 மண்டலங்களில் இந்திய பயணிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்து. கட்டணம் தாமத மாவதைக் காரணம் காட்டி 5 மண்டலங்களில் முதல் 2 மண்டல ஒதுக்கீடுகளை சவூதி அரசு ரத்து செய்துவிட்டது. எஞ்சிய 3 மண்டலங்களுக்கு கட்டணம் செலுத்தும் வசதியையும் சவூதி அரேபிய அரசு நிறுத்திவிட்டது. சவூதி அரசின் நடவடிக்கை யால் இந்தியாவில் இருந்து 52,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்வது கேள்விக்குறியானது.
ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மூலம் சவூதி அரசுக்கு கட்டணம் செலுத்துகின்றனர். பயண ஏற்பாட்டாளர்கள் கட்டணம் செலுத்திய போதும், தூதரகம் மூலம் சவூ திக்குக் கட்டணம் செலுத்துவதில் தாமதம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய சிறுபான்மை நல அமைச்சகம், ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் அலட்சியத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது.
உரிய நடவடிக்கை எடுத்து 52,000 பேரின் ஹஜ் பயணத்தை உறுதி செய்ய வலி யுறுத்தி தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் நவாஸ் கனி ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.