மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த கலைஞர் பெயரில் அறக்கட்டளை அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

1 Min Read

சென்னை,ஏப்.15 மருத்துவ ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதற்காக, கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி அறக்கட்டளை அமைப் பதற்கான அரசாணையை தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் கீழ் இந்த அறக்கட்டளை செயல்படும். மாநில மருத்துவக் கல்வி இயக்குநர் அதன் தலைவராகவும், இணை இயக்குநர் துணை தலைவராகவும் செயல்படுவார்கள். மருத்துவக் கல்லூரி டீன்கள், மருத்துவமனை இயக்குநர்கள் நிலையிலான 4 மருத்துவர்கள், பேரா சிரியர் நிலையிலான 4 மருத்துவர்கள், குடும்ப நலத்துறை துணை செயலர் நிலையில் ஒருவர் மற்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநரகம், சென்னை அய்அய்டி, இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் தலா ஒரு பிரதிநிதி ஆகியோர் அறக்கட்டளை உறுப்பினர்களாக செயல் படுவார்கள்.

மாநிலத்தில் மருத் துவ ஆராய்ச்சி நடவடிக் கைகளை விரிவு படுத்தும் நடவடிக்கைகளிலும், மேம்படுத்தும் பணி களிலும் அறக்கட்டளை செயல்படும். ஆராய்ச்சி திட்டங்களுக்கான விண் ணப்பங்களை கோரி, அவற்றை மதிப்பீடு செய்யும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இதுதொடர் பான அறிவிப்பை சுகா தாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளி யிட்ட நிலையில், அதை செயல்படுத்தும் வகையில் தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *