தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.4.2025) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், சைதாப்பேட்டை எம்.சி. இராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் தரை மற்றுப் பத்து தளங்களுடன் 484 மாணவர்கள் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி மாணவர்களுக்கான புதிய விடுதிக் கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல். திருமாவளவன், ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், சட்டமன்ற உறுப்பினர்கள் கு. செல்வப்பெருந்தகை, த. வேலு, கிருஷ்ணசாமி, இ. பரந்தாமன், தாயகம் கவி, சிந்தனைச்செல்வன், அரவிந்த் ரமேஷ், பிரபாகர ராஜா, தமிழரசி, துணை மேயர் மு. மகேஷ் குமார், தாட்கோ தலைவர் நா. இளையராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.கட்சமி பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்.