பல்கலை. வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் வரவேற்பு

Viduthalai
2 Min Read

கந்தர்வ கோட்டை, ஏப், 9- பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்ற உச்சநீதிமன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புக்கு மாற்றுத்திறனாளி முன் னேற்ற சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் அ.ரகமதுல்லா வரவேற்று அறிக்கை.யில் கூறயிருப்பதாவது:-

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்திய தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கு தமிழ்நாடு அரசால் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பட்டு நடைபெற்று வந்தது. அதில் குறிப்பாக தமிழ்நாடு பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, பெரியார் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழகத்தின் சட்ட திருத்த மசோதா, தமிழ்நாடு தொழில்நுட்ப பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா, தமிழ் நாடு வேளாண்மை பல் கலைக்கழக சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட பத்து மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் உச்ச நீதிமன்றம் ‌ அதிரடியாக பத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வெளி யிட்டுள்ளது.
அதன்படி இனி பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சரை நியமிக்கலாம் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்டு ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 சட்ட முன் வடிவுகளுக்கு உச்ச நீதிமன்றத்திற்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 142ஆவது பிரிவின்படி யுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் அளித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இனி பல் கலைக்கழகங்களில் வேந்தர் முதல்வர் என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை இந்தியாவிற்கே பெற்றுக் கொடுத்த முன்மாதிரி முதலமைச்சராக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வரவேற்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி பல்கலைக்கழகங்களில் வேந்தராக பதவி ஏற்க உள்ள தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை யும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ‘மாநில முதலமைச்சரே சுதந்திர நாளில் கொடி ஏற்றும் உரிமையை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் பெற்றுக் கொடுத்ததை போல தந்தை வழியில் இன்று இந்தியாவிற்கு பல்கலைக்கழகத்தின் வேந்தராக இனி மாநில முதலமைச்சர்களே பதவி வகிக்கலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை தமிழ்நாடு முதலமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்.

மாநில உரிமைக்காக போராடிவரும் தமிழ் நாடு வெல்லும், தமிழ் நாடு போராடும் என்ற முழக்கத்தோடு தொடர்ந்து போராடிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர் பெருமக்களுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கி றோம்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சரிடம் நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மாற்று திறனாளி அரசு ஊழிய, ஆசிரியர் பெருமக்களுக்கு பதவி உயர்வில் நான்கு சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம் என அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *