புதுடில்லி, ஏப். 12- ஓராண்டுக்கு முன்பு பிரதமர் மோடி அறிவித்த வேலை வாய்ப்பு நிறைந்த ஊக்க தொகை திட்டம் என்ன ஆயிற்று என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். சுமார் ஒன்றரை ஆண்டு ஆன பிறகும் அந்தத் திட் டத்தை ஒன்றிய அரசு வரையறுக்கவில்லை.
வேலையில்லா திண்டாட்டம்
ஒதுக்கப்பட்ட ரூபாய் பத்தாயிரம் கோடி என்ன ஆனது என்று தெரியவில்லை. வேலை யில்லா திண்டாட்டம் குறித்து பிரதமர் மோடி எவ்வளவு அக்கறையா இருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. பிரதமர் மோடி ஒவ்வொரு நாளும் புது முழக்கங்களை எழுப்புகிறார். ஆனால் இளைஞர்கள் இன்னும் உண்மையான வேலை வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்க உங்களது உறுதியான திட்டம் என்ன ஆனது? இது மற்றொரு வெற்று முழக்கம் தானே பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது மட்டும் கவனம் செலுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியாது. சிறு குறு நடுத்தர நிறுவனங்களில் பெரும் அளவிலான முதலீடுகள், நியாயமான சந்தைகள், உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவு, இளைஞர்களுக்கு திறன் பயிற்சி ஆகியவை மூலம் தான் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
பிரதமர் மோடி எப்பொழுதும் அதானி மற்றும் தனது பணக்கார நண்பர்களை வளப்படுத்துவதை விட்டுவிட்டு நலிந்த பிரிவினர் வேலை வாய்ப்பு பெறுவதில் எப்பொழுது கவனம் செலுத்துவார் என்று வினாவை எழுப்பி உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி.